🎤இன்று 17.09.2026 பள்ளிகளில் எடுக்க வேண்டிய சமூக நீதி நாள் உறுதிமொழி.
![]() |
| Pledge |
பெரியாரின் பிறந்தநாளான இன்று சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
அனைத்து பள்ளிகளிலும் சமூக நீதி உறுதிமொழி எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சமூக நீதி நாள் உறுதி மொழி
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும்-
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைப்பிடிப்பேன்!
சுயமரியாதை ஆளுமைத் திறனும் - பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!
சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன்!
மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன்.
சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன்!

0 Comments